பதிவு செய்த நாள்
12 டிச2016
05:42
இந்திய ஊழியர்கள், 2017ல், 10 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என, சர்வதேச ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. கோர்ன் பெரி ஹே குழுமம், 2017க்கான ஊதிய கணிப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவில் உள்ள ஊழியர்கள், 10 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு, இது, 10.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பணவீக்கத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், ஊதிய உயர்வின் பலன், 4.8 சதவீதமாக மட்டுமே இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், உலக நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவில், ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் ஓரளவு அதிகமாகவே இருக்கிறது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இது உலகளவில், 9.5 முதல், 10.5 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உயர் பதவியில் உள்ளவர்களை விட, அறிமுக நிலையிலான பணிகளில் ஊதிய உயர்வு அதிகமாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள, 110 நாடுகளில் அமைந்துள்ள, 25 ஆயிரம் நிறுவனங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வை மையமாக கொண்டு, இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|