பதிவு செய்த நாள்
13 டிச2016
01:16
மும்பை:டாடா சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிவது, டாடா நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம், மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில், இந்நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கும் தீர்மானத்திற்கு, பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.இதையடுத்து டாடா இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், அவர், நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தும், நீக்கப்படுகிறார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து, அக்., 24ல், சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதையடுத்து, முதன் முறையாக, பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலுடன் டாடா இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அடுத்து வரும் நாட்களில், டாடா நிறுவனங்கள் பலவற்றின் சிறப்பு பொதுக் குழு கூட்டங்கள் நடைபெற உள்ளன. அவற்றில் வகித்து வரும் இயக்குனர், தலைவர் பொறுப்புகளில் இருந்தும், சைரஸ் மிஸ்திரி நீக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|