பதிவு செய்த நாள்
13 டிச2016
01:19
புதுடில்லி:மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச மருந்து சந்தையின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகளாலும், மருந்து விலை நிர்ணய உரிமையாலும், புதிய மருந்துகளை அறிமுகப்படுத்த, நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதனால், இந்திய மருந்து நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்களைகையகப்படுத்துவது அதிகரிக்கும்.இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாயில், தற்போது, அமெரிக்காவின் பங்களிப்பு, 40 –50 சதவீதமாக உள்ளது.
அடுத்த, இரண்டு ஆண்டுகளில், அமெரிக்க மூல மருந்து சந்தை, 10 சதவீதம் வளர்ச்சி காணும். மேலும், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, மருந்துகளின் காப்புரிமை காலாவதியாவதாலும், ஆரோக்கிய பராமரிப்பு செலவினத்தை குறைக்க, அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாலும், இந்திய மருந்து நிறுவனங்களின் அமெரிக்க வர்த்தகம், சிறப்பாக வளர்ச்சி காணும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|