பதிவு செய்த நாள்
13 டிச2016
01:23
கொச்சி:அன்னியச் செலாவணி, பணப் பரிமாற்றம் உள்ளிட்ட நிதிச் சேவைகளில் ஈடுபட்டு வரும் யு.ஏ.இ., எக்சேஞ்ச் நிறுவனம், பெண்களுக்கு, இரு சக்கர வாகன கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.பெண்களுக்காக, வாகனத்தின் விலைக்கு நிகரான தொகையை, கடனாக வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், அவர்களின் வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்த துணை புரியும். பெண்கள், தங்களின் ஊதிய சான்று அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் நகல் அளித்து, கடனுதவி பெறலாம். சுயதொழில் செய்யும் பெண்கள், வங்கி கணக்கு விவரங்களை வழங்கி, இருசக்கர வாகனம் வாங்க, கடன் பெறலாம் என, யு.ஏ.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்சில், அபுதாபியில், தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் இந்நிறுவனம், இந்தியா உள்ளிட்ட, 31 நாடுகளில், கிளைகளை கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|