பதிவு செய்த நாள்
13 டிச2016
01:25
புதுடில்லி:எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமன்ட் சர்வீசஸ் நிறுவனத்தின், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் பிரிவின் தலைமை செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறியதாவது:அதிக வருவாய் உள்ள, தகுதி படைத்தவர்களுக்கு, நிறுவனம், கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது.அடுத்து, குறைந்த வருவாய் உள்ளோருக்கும் கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பலர், வாங்கிய கடனை திரும்ப அளிக்கும் தகுதி இருந்தும், தங்களின் வருவாய் வரம்பு காரணமாக, கிரெடிட் கார்டு பெற முடியாமல் இருப்பர்.அத்தகையோருக்கு, கிரெடிட் கார்டு வழங்க உள்ளோம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், இத்தகைய திட்டம், குறைந்த வருவாய் பிரிவினருக்கு உதவும் என, நம்புகிறோம்.மேலும், அதிகபட்சமாக, 2 – 3 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|