பதிவு செய்த நாள்
14 டிச2016
03:15
புதுடில்லி:நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல், கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸான், கார்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, கார் உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, நிஸான், டட்சன் உள்ளிட்ட மாடல் கார்களின் விலையை, 30 ஆயிரம் ரூபாய் வரை, உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது. இந்த உயர்வு, 2017 ஜன., முதல், அமலுக்கு வர உள்ளது.
இது குறித்து, நிஸான் இந்தியா நிர்வாக இயக்குனர் அருண் மல்கோத்ரா கூறுகையில், ‘‘மூலப்பொருட்கள் விலை உயர்வால், எங்கள் கார்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது. இது, போட்டி நிறுவனங்களைசமாளிக்க உதவும்,’’ என்றார்.
இதே போல், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், தன் கார்களின் விலையை, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, அடுத்த மாதம் முதல், உயர்த்த உள்ளது. ரெனோ இந்தியா, டொயேட்டோ நிறுவனங்களும், ஜன., முதல், கார்களின் விலையை, 3 சதவீதம் உயர்த்த போவதாக அறிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|