பதிவு செய்த நாள்
14 டிச2016
03:18
மும்பை:ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:செல்லாத ரூபாய் நோட்டுகளை, ‘டிபாசிட்’ செய்வதிலும், புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதிலும், ஆக்சிஸ் வங்கியின், குறிப்பிட்ட சில கிளைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்காக, ஆக்சிஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பான எந்த நடவடிக்கையும், ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே, ஆக்சிஸ் வங்கி, மும்பை பங்குச்சந்தைக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன் விபரம்: ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆக்சிஸ் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உள்ளதாக, ஒரு நாளிதழ், உண்மைக்கு மாறான செய்தி வெளியிட்டு உள்ளது. வாடிக்கையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி, வங்கியின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் செய்தி வெளியிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|