பதிவு செய்த நாள்
14 டிச2016
03:23
மும்பை:ஊழியர்கள் தங்களுக்கான விடுமுறையை பயன்படுத்தி, வெளியிடங்களுக்கு செல்லாமல் இருக்கும் நாடுகளில், இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளதாக, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சர்வதேச அளவில், அலுவலக விடுமுறையை அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் நாடுகள் குறித்த ஆய்வை, ‘எக்பீடியா’ என்ற நிறுவனம் நடத்தியது. அதில், ஸ்பெயின், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை, தலா, 68 சதவீதத்துடன் முதலிடத்திலும்; மலேஷியா, 67 சதவீதத்துடன், இரண்டாவது இடத்திலும்; தென் கொரியா, 64 சதவீதத்துடன், மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், இந்தியா, 63 சதவீதத்துடன், நான்காவது இடத்தில் உள்ளது.
இது குறித்து, எக்பீடியா ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி, மன்மீத்அலுவாலியா கூறியதாவது:வேலையில் ஏற்படும் களைப்பை போக்குவதில், விடுமுறை எடுத்து வெளியிடங்களுக்கு செல்வது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், பலர் அந்த விடுமுறை வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்.
இந்தியர்களை பொறுத்தவரை, அவர்கள் தனியாக சுற்றுலா செல்வதை விரும்புவதில்லை. குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இருவருடனாவது சேர்ந்து செல்லவே, அவர்கள் விரும்புகின்றனர். அதன்படி, மனைவியை அழைத்து செல்வோர், 73 சதவீதம்; குழந்தைகளையும் அழைத்து செல்வோர், 59 சதவீதம்; நண்பர்களுடன் செல்வோர், 53 சதவீதம் என்ற அளவில் உள்ளனர்.
இந்தியர்களில், 40 சதவீதம் பேர், விடுமுறை நாட்களை பயன்படுத்தாததற்கு காரணம், அவர்களின் வேலை பளு அதற்கு அனுமதிப்பதில்லை அல்லது அலுவலகத்தில், போதுமான ஆட்கள் இல்லாத காரணத்தால், அவர்களால் விடுமுறையை அனுபவிக்க இயலாமல் போய் விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|