பதிவு செய்த நாள்
14 டிச2016
10:24
ராமநாதபுரம்: வர்தா புயல் எச்சரிக்கையால் மீன்பிடி தொழில் முடங்கியுள்ள நிலையில் மீன்கள் விலை எகிறியது. வர்தா புயல் நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்தது. இதன் எதிரொலியாக மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்ல 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த விசைபடகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அடைப்பு வலை, வீச்சு வலை, கரை வலை மூலம் பிடிக்கப்படும் குறைந்தளவு மீன்கள் மட்டுமே நேற்று விற்பனைக்கு வந்தது.
கடந்த வாரம் 180 ரூபாய்க்கு விற்பனையான விளைமீன் 240, 220க்கு விற்பனையான ஊழிமீன் 320, 160க்கு விற்பனையான பன்னாமீன் 210, 180க்கு விற்பனையான நகரை 230, 200க்கு விற்பனையான பாரை 280, 350க்கு விற்பனையான சீலா 460 என விலை எகிறியது. சிறிய ரக சூடை, காரல், சூவாபாரை மீன்கள் கிலோ 80 முதல் 120 வரை விற்கப்பட்டது. 180க்கு விற்ற நண்டு 240, 160க்கு விற்ற கணவாய் 210 ஆக அதிகரித்தது. மார்கழியில் மீன் விலை எகிறியுள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|