பதிவு செய்த நாள்
14 டிச2016
17:24
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. கடந்தாண்டு இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லரை வர்த்தக பணவீக்கம் 3.63 சதவீதமாக சரிந்தது, வட்டி விகிதம் தொடர்பாக அமெரிக்க பெடரல் வங்கி மேற்கொள்ளப்பட இருக்கும் முக்கிய முடிவு மீதான எதிர்பார்ப்பு போன்றவற்றால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 94.98 புள்ளிகள் சரிந்து 26,682.45-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 39.35 புள்ளிகள் சரிந்து 8,182.45-ஆகவும் இருந்தன. இன்றைய வர்த்தகத்தில் சுரங்கம், எண்ணெய், எரிவாயு தொடர்பான பங்குகள், சிப்லா, ஐசிஐசிஐ., எஸ்பிஐ., பார்த்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|