இந்­தி­யாவில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்புஇந்­தி­யாவில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளி­யீ­டுகள்:உள்­நாட்டு நிறு­வ­னங்கள் திரட்­டிய நிதி கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
01:29

மும்பை:இந்­தாண்டு, 26 நிறு­வ­னங்கள், மூல­தனச் சந்­தையில் பங்­கு­களை வெளி­யிட்டு, 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக நிதி திரட்டிக் கொண்­டன. இது, கடந்த ஆண்டு திரட்­டப்­பட்­டதை விட, இரு மடங்கு அதிகம். கடந்த, 2010ல், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 37,535 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது. அதன்பின், இந்­தாண்டு தான், மிக அதிக அளவில் நிதி திரட்­டப்­பட்­டுள்­ளது.
இந்­தாண்டு, சேவைகள், சிறிய வங்கி, காப்­பீடு, மருத்­துவ ஆய்வு உள்­ளிட்ட பல்­வேறு துறை­களைச் சேர்ந்த, 26 நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்­டன. மத்­திய அரசின் சீர்­தி­ருத்த திட்­டங்­களால் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, மேம்­பட்டு வரு­கி­றது. பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ எடுத்து வரும் ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­களால், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, பங்கு வெளி­யீ­டுகள் மீதான நம்­பிக்கை அதி­க­ரித்­து உள்­ளது.
கடந்த இரண்டு ஆண்­டுகள் வறட்­சிக்கு பின், இந்­தாண்டு பரு­வ­மழை பர­வ­லாக பெய்­துள்­ளது. இது போன்ற சாத­க­மான அம்­சங்­களால், பல்­வேறு நிறு­வ­னங்கள், கடந்த செப்­டம்பர் வரை அதிக அளவில் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்­டன. அதன்பின், அமெ­ரிக்க அதிபர் தேர்தல் பர­ப­ரப்பும், அந்­நாட்டின் மத்­திய வங்கி, வட்­டியை உயர்த்தும் என்ற எதிர்­பார்ப்பும், சில நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீ­டு­களை தள்ளிப் போட வைத்­தன.
இந்­நி­லையில், நவ., 8ல் அறி­விக்­கப்­பட்ட பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையும் சேர்ந்து கொள்ள, புதிய பங்கு வெளி­யீட்டு­ சூழல் முடங்­கி­யுள்­ளது. இந்­தாண்டு, புதிய பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்­கிய பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நல்ல வரு­வாயை அளித்­துள்­ளன. 70 சத­வீத நிறு­வ­னங்­களில், பங்கு வெளி­யீட்டு விலையை விட, 25 சத­வீதம் கூடுதல் வருவாய் கிடைத்­துள்­ளது. நான்கு அல்­லது ஐந்து நிறு­வ­னங்­களின் பங்­குகள் விலை மட்­டுமே, வெளி­யீட்டு விலையை விட, குறைந்து உள்­ளன.
சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவில், இந்­தாண்டு, 150க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்கள், புதிய பங்­கு­களை வெளி­யிட்டு, 1,100 கோடி ரூபாய் திரட்டிக் கொண்­டன. இப்­பி­ரிவில், கடந்த ஆண்டு, 252 கோடி ரூபாய் மட்­டுமே திரட்­டப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது. வரும் ஆண்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மேலும் சூடு பிடிக்கும் என, பங்குச் சந்தை வல்­லு­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)