பதிவு செய்த நாள்
17 டிச2016
11:23
புதுடில்லி: 'புதிய வடிவில், ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு, நிதித் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால், எழுத்து மூலம் அளித்த பதில்: மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது; புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளும் வரவேற்பை பெற்றுள்ளன. புதிய வடிவில், 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடவும், அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, புதிய வடிவில், 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள், விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
செல்லாத நோட்டு அறிவிப்பால், மக்கள் கஷ்டத்தை போக்கும் வகையில், போதுமான பணத்தை, வங்கிகள், தபால் அலுவலகங்களுக்கு வழங்க, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சி, பல அம்சங்களை சார்ந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி, இப்போது, எதுவும் கூற முடியாது. செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், 370 கோடி ரூபாய்க்கு, ரொக்கம் மற்றும் நகைகளை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|