தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ... ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஒரு பகுதியின் விலை இது தான் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஒரு பகுதியின் விலை இது தான் ...
புதிய வடிவில் ரூ.20 - 50 நோட்டு : மத்திய அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
11:23

புதுடில்லி: 'புதிய வடிவில், ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு, நிதித் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால், எழுத்து மூலம் அளித்த பதில்: மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது; புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளும் வரவேற்பை பெற்றுள்ளன. புதிய வடிவில், 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடவும், அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, புதிய வடிவில், 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள், விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
செல்லாத நோட்டு அறிவிப்பால், மக்கள் கஷ்டத்தை போக்கும் வகையில், போதுமான பணத்தை, வங்கிகள், தபால் அலுவலகங்களுக்கு வழங்க, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சி, பல அம்சங்களை சார்ந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி, இப்போது, எதுவும் கூற முடியாது. செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், 370 கோடி ரூபாய்க்கு, ரொக்கம் மற்றும் நகைகளை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)