பதிவு செய்த நாள்
17 டிச2016
15:43
புதுடில்லி : இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனுடன் ஜியோ புத்தாண்டு சலுகையும் வழங்கப்படுகிறது.ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. எலைட் மேக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எலைட் மேக்ஸ் ஸ்மார்ட்போனுடன் ஜியோ புத்தாண்டு சலுகையும் வழங்கப்படுகின்றது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது. 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றது. புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி பிரைமரி கேமரா, பிடிஏஎப் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் பேனல் கொண்டிருக்கும் ஸ்வைப் எலைட் மேக்ஸ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இந்தியாவில் ரூ.10,999 என்ற விலைக்கு கிடைக்கும் ஸ்வைப் எலைட் மேக்ஸ், சியோமி ரெட்மி நோட் 3 மற்றும் மோட்டோ ஜி4 போன்ற கருவிகளுடன் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|