பிஎஸ்என்எல்.,ல் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்புபிஎஸ்என்எல்.,ல் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு ... அடிப்­படை கட்­ட­மைப்பு துறையால்நாட்டின் பொரு­ளா­தாரம் 3 சத­வீதம் உயரும் அடிப்­படை கட்­ட­மைப்பு துறையால்நாட்டின் பொரு­ளா­தாரம் 3 சத­வீதம் உயரும் ...
பட்ஜெட் விலையில் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
15:43

புதுடில்லி : இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனுடன் ஜியோ புத்தாண்டு சலுகையும் வழங்கப்படுகிறது.ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. எலைட் மேக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எலைட் மேக்ஸ் ஸ்மார்ட்போனுடன் ஜியோ புத்தாண்டு சலுகையும் வழங்கப்படுகின்றது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது. 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றது. புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி பிரைமரி கேமரா, பிடிஏஎப் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் பேனல் கொண்டிருக்கும் ஸ்வைப் எலைட் மேக்ஸ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இந்தியாவில் ரூ.10,999 என்ற விலைக்கு கிடைக்கும் ஸ்வைப் எலைட் மேக்ஸ், சியோமி ரெட்மி நோட் 3 மற்றும் மோட்டோ ஜி4 போன்ற கருவிகளுடன் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)