உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய விதி­மு­றைகள் உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்­க­ளிடம் பணக்­கோ­ளாறு இருக்­கி­றதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2016
05:25

அள­வுக்கு அதி­க­மாக செலவு செய்யும் பலர், செலவு பழக்­கத்­திற்கு அடி­மை­யாகி இருப்­ப­தா­கவும், இதுவே மோச­மான நிதி நிர்­வா­கத்­திற்­கான மூலக்­கா­ர­ண­மாக அமை­கி­றது என்றும், இவற்றில் இருந்து மீள்­வ­தற்­கான வழி­க­ளையும், தி மணி டிராப் புத்த­கத்தில் ரான் கல்லன் விவ­ரிக்­கிறார்;அதி­க­மாக செலவு செய்­ப­வர்கள், பொரு­ளியல் தேவை மற்றும் செல­வு­க­ளுக்கு அடி­மை­யாக இருக்­கின்­றனர். இது போதை பழக்கம் போலவே தீங்­கா­னது. ஒரு சமூ­க­மாக நம் பிரச்­ச­னை­களை தீர்ப்­ப­தற்­கான பணத்தின் ஆற்றல் மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­தி­ருக்­கிறோம். பல நேரங்­களில், பணத்தால் சரி செய்ய முடி­யாத விஷ­யங்­களை, நாம் பணத்தை கொண்டு தீர்வு காண முயல்­கிறோம். இது போன்ற செயல்­களே பணக்­கோ­ள­ாறு­க­ளுக்கு கார­ண­மாக அமை­கி­றது.பணக்­கோ­ளா­று­களின் தன்மை அடிப்­ப­டையில், இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை நான்­கு­வித­மாக பிரிக்­கலாம். முதல் ரகம், செல­வா­ளிகள். அதா­வது அள­வுக்கு மீறி செலவு செய்­ப­வர்கள். அதிகம் செலவு செய்­வது என்­பது உண்­மையில் பணத்­துடன் தொடர்­பு­டை­யது அல்ல. அது உணர்வு சார்ந்­தது. பெரும்­பாலும், பலரும், குறிப்­பிட்ட சம்­பளம் வாங்­கு­ப­வர்கள் இப்­படி தான் செல­விட வேண்டும் எனும் எண்­ணத்தின் அடிப்­ப­டையில் செலவு செய்­கின்­றனர். அனேக­மாக இந்த எண்ணம் தவறா­கவே இருக்­கி­றது. வேலையே கதி என இருப்­ப­வர்கள், இரண்­டா­வது ரகத்­தினர். இவர்கள் தங்கள் செலவு பழக்­கத்தை, இலக்கு, போட்டி, சமூக நிர்ப்­பந்தம் என, பல கார­ணங்­க­ளுக்கு பின்னே மறைத்­துக்­கொள்­கின்­றனர். இவர்­க­ளுக்கு தங்கள் வேலையில், போதும், என்ற எண்ணம் இல்­லா­ததே, இப்­படி மேலும் மேலும் தேட வைக்­கி­றது.இதே போல, பணம் மீது மோகம் கொண்­டி­ருப்­ப­வர்கள் மற்றும் குறை­வாக சம்­பா­திப்­ப­வர்கள் என, மேலும் இரு பிரி­வினர் உள்­ளனர். பண மோகம் கொண்­ட­வர்கள் பணம் தொடர்­பாக பகல் கனவு காண்­கின்­றனர். போதிய அளவு சம்­பா­திக்­கா­த­வர்கள் சுய கவு­ரவம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இவர்கள் அதிகம் சம்­பா­திக்க தகு­தி­யற்­ற­வர்கள் என, நினைக்­கின்­றனர்.இந்த கோளா­றுகள் தனி­ந­பர்­க­ளிடம் இருக்­கலாம்; தம்­ப­தி­களில் ஒரு­வ­ரி­டையே இருக்­கலாம்; இரு­வ­ரி­டமும் இருக்­கலாம். இவற்றில் இருந்து மீள்­வ­தற்­கான வழி, பண விஷ­யத்தில் எந்த நிலையில் இருக்­கிறோம் என்­பதை அறிந்து, தெளி­வான செலவு திட்­டத்தை கொண்­டி­ருப்­ப­தாகும். தெளி­வான செலவு திட்­டமே, செல­வு­களை குறைப்­ப­தற்­கான வழி­யாகும். செல­வு­களில் உள்ள ஓட்­டை­களை கண்­ட­றிந்து அடைப்­பது முக்­கியம். ஒரு குறிப்­பேட்டில் செலவு பழக்­கங்­களை குறித்து வைப்­பதும் நல்­லது. செலவு பிரச்னை கொண்ட பலரும் நேர பிரச்­னையும் பெற்­றி­ருக்­கின்­றனர். குறிப்­பாக பணியில் மூழ்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இது பிரச்­னை­யாக அமை­கி­றது. எனவே, நேர நிர்­வாக திட்­டத்தை வகுத்­துக்­கொள்ள வேண்டும்.எதிர்­பாரா செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­கான அவ­சர நிதியை உரு­வாக்கி கொள்­வது மற்றும் ஓய்வு கால நிதி ஆகி­யவை அவ­சியம். ஆனால் இவற்றில் மிகை­யான கவ­னத்தை தவிர்க்­கவும். பணத்தின் மோகம் கொள்­வதில் இருந்து விடு­பட்டு, வாழ்க்­கையை முழு­வதும் அனு­ப­விப்­பதே முக்­கியம் என உணர வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)