உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய விதி­மு­றைகள் உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘நெப்ட்’ மூலம் பணம் அனுப்­பு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2016
05:28

இணையம் மூல­மான பண பரி­வர்த்­தனை வச­தி­களில் ‘நெப்ட்’ வசதி அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக இருக்­கி­றது. தேசிய மின்­னணு நிதி பரி­வர்த்­தனை வசதி என்­பதன் சுருக்­கமே, நெப்ட் எனப்­ப­டு­கி­றது. இந்த வசதி மூலம் வங்கி கணக்கில் இருந்து இணையம் மூலம் இன்­னொ­ருவர் வங்கி கணக்­கிற்கு எளி­தாக பணம் அனுப்­பலாம். இந்த வச­தியை எப்­படி பயன்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பாக ஓர் அறி­முகம்;‘நெப்ட்’ மூலம் பணம் அனுப்ப நெட் பேங்கிங் வசதி இருக்க வேண்டும். மேலும் பணம் அனுப்பும் நபர் வங்கி கணக்கு, பெயர் ஐ.எப்.எஸ்.கோடு ஆகிய விப­ரங்கள் தெரிய வேண்டும். பணம் அனுப்ப முதலில், உங்கள் நெட் பேங்கிங் கணக்­கிற்குள் நுழைய வேண்டும். அதன் பின், தேர்ட் பார்டி டிரான்ஸ்பர் வச­திக்­கான பகு­தியை கண்­ட­றிந்து, ‘கிளிக்’ செய்ய வேண்டும். இப்­போது அதே வங்­கிக்குள் மாற்­று­வது, வேறு வங்கி கணக்­கிற்கு மாற்­று­வது மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்­து­வது ஆகிய வாய்ப்­பு­களை பார்க்­கலாம். பின், ‘ரிக்வஸ்ட்’பகு­தியில் உங்கள் கணக்கில் இருந்து பணம் பெறு­பவர் விப­ரத்தை தெரி­விக்கும் வாய்ப்பு பகு­தியை காணலாம்.
என்ன தேவை?இந்த பகு­தியை தேர்வு செய்­ததும், பணம் பெறு­பவர் அதே வங்­கி­யைச்­ சேர்ந்­த­வரா? அல்­லது வேறு வங்­கியை சேர்ந்­த­வரா? என, தேர்வு செய்ய வேண்டும். அதற்­குரிய பகு­தியை ‘கிளிக்’ செய்­ததும் பெயர், வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.கோடு விப­ரங்­களை சமர்­ப்பிக்க வேண்டும். உங்கள் பரி­வர்த்­த­னையை உறுதி செய்ய, வங்கி ஒரு­முறை பாஸ்­வேர்டை அனுப்பி வைக்கும். நீங்கள் உறுதி செய்த பின், பணம் பெறு­பவரின் வங்கி கணக்கு சேர்க்­கப்­படும்.வங்கி கணக்கு சேர்க்­கப்­பட்ட பின், வங்கி குறுஞ்­செய்தி ஒன்றை அனுப்­பி­வைக்கும். ‘நெப்ட்’ மூலம் பணம் அனுப்ப, உங்கள் கணக்­கிற்குள் நுழைந்து பணத்தை வங்­கிக்குள் உள்ள ஒரு­வரின் கணக்­கிற்கா அல்­லது வேறு வங்­கியில் கணக்கு வைத்­தி­ருப்­ப­வ­ருக்கா எனும் வாய்ப்பை தேர்வு செய்து, அனுப்ப வேண்­டிய தொகையை குறிப்­பிட வேண்டும். பரி­வர்த்­த­னையை உறுதி செய்த பின், நீங்கள் அனுப்­பிய நப­ருக்கு, பணம், அரை மணி நேரத்­திற்குள், அவ­ரது கணக்­கிற்கு சென்­று­விடும்.
கட்­டணம் உண்டா?பணம் அனுப்ப சிறி­த­ளவு கட்­டணம் உண்டு. இது அனுப்பி வைக்­கப்­படும் தொகைக்கு ஏற்ப அமையும். இந்த வசதி மூலம், பணம் அனுப்ப குறைந்த பட்ச தொகை அல்­லது உச்­ச­பட்ச தொகை என வரம்பு இல்லை. ஆனால், 24 மணி நேரமும் இந்த வச­தியை பயன்­ப­டுத்த முடி­யாது. இதன் வேலை நேரத்தில் மட்­டுமே பயன்­ப­டுத்த முடியும். பொது­வாக, வார நாட்­களில் காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இதன் வேலை நேரம் அமை­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)