உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய விதி­மு­றைகள் உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாலெட்கள் பயன்­பாட்டில் வரக்­கூ­டிய பிரச்­­னை என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2016
05:32

மொபைல் வாலெட்கள் பயன்­பாடு அதி­க­ரிக்கும் நிலையில், அவற்றை கையாளும் போது ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­னைகள் எவை என்றும், அவற்­றுக்கு தீர்வு காண, முறை­யீடு செய்யும் வழி­மு­றை­களை அறிந்­தி­ருப்­பதும் அவ­சி­ய­மா­கி­றது.
பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின் டிஜிட்டல் பரி­வர்த்­தனை தொடர்­பான விழிப்­பு­ணர்வும், பயன்­பாடும் அதி­க­ரித்­து இ­ருக்­கி­றது. ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்த உதவும் மொபைல் வாலெட்­களின் பயன்­பாடும் கணி­ச­மாக உயர்ந்­துள்­ளது. வாலெட் நிறு­வ­னங்கள் மக்­களின் கவ­னத்தை டிஜிட்டல் பரி­வர்த்­தனை நோக்கி ஈர்க்க, பல மடங்கு வேகத்­துடன் செயல்­பட்டு வரு­கின்­றன. வங்­கி­களும் வாலெட் உள்­ளிட்ட, டிஜிட்டல் பரி­வர்த்­த­னை­களை பெரிய அளவில் முன்­னி­றுத்தி வரு­கின்­றன. டிஜிட்டல் பரி­வர்த்­தனை பயன்­பாடு அதி­க­ரிக்கும் நிலையில், இந்த சேவைகள் தொடர்­பான சிக்­கல்கள் மற்றும் பிரச்­னை­களை வாடிக்­கை­யா­ளர்கள் எதிர்­கொள்ளும் நிலை உரு­வா­கலாம்.
வங்­கிச்­ சே­வையில் ஏதேனும் பிரச்­­னைகள், குறை­களை எதிர்­கொள்ளும் போது, அவற்­றுக்கு தீர்வு காண வாடிக்­கை­யாளர்­களுக்கு பல்­வேறு வச­திகள் உள்­ளன. வங்­கிக்கு தொலை­பேசி மூலம் அல்­லது இ – மெ­யிலில் புகார் தெரி­வித்து நட­வ­டிக்கை எடுக்க கோரலாம். கிளைக்கு நேரா­கச் ­சென்று மேலா­ள­ரிடம் முறை­யி­டலாம். இத்­த­னைக்கு பிறகும் தீர்வு கிடைக்­கா­விட்டால், ஓம்­பட்ஸ்மன் எனப்­படும், வங்கி நடு­நி­லை­யா­ளரை அணு­கலாம். இல்லை என்றால், நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கலாம்.
வாலெட் அனு­பவம்இதே போல, டிஜிட்டல் வாலெட்­களை பயன்­ப­டுத்தும் போது, சேவை தொடர்­பான பிரச்­னை­களை எதிர்­கொள்ளும் போது வாடிக்­கை­யாளர் என்ன செய்ய வேண்டும்? எனும் கேள்வி எழு­கி­றது. இது வாடிக்­கை­யா­ளர்கள் மற்றும் சேவை நிறு­வனங்கள் என, இரு­த­ரப்­பி­ன­ருக்­குமே புதிய சூழ­லாகும். முதலில் வாலெட் பயன்­பாட்டில் என்ன எல்லாம் சிக்­கல்கள் வர வாய்ப்­புள்­ளன என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். வாலெட்கள் இடை­யி­லான பரி­வர்த்­தனை முற்­று­பெ­றாமல் தோல்­வியில் முடிய வாய்ப்­பி­ருப்­ப­தாக துறை சார்ந்த வல்லுனர்கள் கூறு­கின்­றனர். பொது­வாக பரி­வர்த்­தனை தோல்வி அடையும் போது, பணம் உடனே செலுத்­தி­யவர் கணக்­கிற்கு திரும்­பி­விடும். வாலெட்டில் இருந்து வங்கி கணக்­கிற்கு செலுத்­தப்­படும் போது, இவ்­வாறு நிகழாமல் தாம­த­மா­கலாம்.
வங்கி சர்வர் போன்­றவை வேகம் குறைந்­தி­ருக்கும் போது இவ்­வாறு நிக­ழலாம். இதே போலவே பணத்­திற்­கான கோரிக்கை சமர்­ப்பித்த உடன், இடை­ப்பட்ட என்.பி.சி.ஐ., அமைப்பின் ஸ்விட்சில் தாமதம் ஏற்­பட்­டாலும் வங்­கி­யிடம் இருந்து உறு­திப்­ப­டுத்தும் தகவல் வராமல் போகலாம். நெட் பேங்கிங் மூலம் வாலெட்­களில் இருந்து கோரிக்கை அனுப்பி வைக்­கப்­படும் போதும், ஏதேனும் சிக்கல் உண்­டா­கலாம். வாலெட்கள் இத்­த­கைய கோரிக்­கை­களை கையாள, 24 மணி நேரம் எடுத்­துக் ­கொள்­கின்­றன. அதன் பிறகு பிரச்னை இருந்தால் வங்­கியை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முயற்­சிக்கும். சர்வர் வேகம் குறை­வது அல்­லது இணைய இணைப்பு பிரச்னை கார­ண­மாக சேர வேண்­டிய தொகை இடையே காணாமல் போன­தாக தோன்­றலாம். இப்படி தோன்­றி­னாலும், உண்­மையில் அந்த தொகை கணக்கில் இருப்­பதை பின்னர் உண­ரலாம் என, வல்­லு­னர்கள் விளக்கம் அளிக்­கின்­றனர்.
முறை­யீடு செய்­வது எப்­படி?ஆக வாலெட் பயன்­பாட்டில் வாடிக்­கை­யா­ளர்கள் சேவை தொடர்­பான குறை­களை சந்­திக்க நேரலாம். சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னத்­திற்கு இமெயில் மூலம் புகார் தெரி­வித்து நிவா­ரணம் கோரலாம் என்­றாலும், வாலெட் சேவைக்கு என்று நடு­நி­லை­யாளர் இல்­லாத போது என்ன செய்­வது? குறை­க­ளுக்கு நிவா­ரணம் காணும் வழி­முறை வாலெட் நிறு­வ­னங்­களி­டையே மாறு­ப­டலாம். ஆனால் பொது­வாக வாலெட் நிறு­வனங்­க­ளுக்கு பங்­குதாரர் வங்­கிகள் இருக்கும். அந்த வங்­கிகள் பின்­பற்றும் வாடிக்­கை­யாளர் சேவை தொடர்­பான நெறி­மு­றை­களை அவையும் பின்­பற்­றலாம். வாலெட் நிறு­வ­னங்­களின் கால்­சென்­டர்­க­ளையும் தொடர்பு கொள்­ளலாம். வாலெட் செய­லி­கள் மூலம் கூட புகார்­களை தெரி­விக்கும் வசதி இருக்­கி­றது. இதற்­கான தொலை­பேசி எண்­களும் கூட இருக்­கின்­றன. இமெயில் அல்­லது நிறு­வ­னத்தின் சமூக ஊடக பக்­கங்கள் மூலமும் புகார் தெரி­விக்­கலாம் என்­கின்­றனர். எனினும் வாடிக்­கை­யாளர் சேவையில் வாலெட் நிறு­வ­னங்கள் இன்னும் முனைப்பு காட்ட வேண்டும் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)