பதிவு செய்த நாள்
20 டிச2016
00:01
விசாகப்பட்டினம் : ‘‘மருந்து தொழிற்சாலைகளை அமைப்பதற்கு, ஆந்திர மாநிலம் மிகச்சிறந்த இடம்,’’ என, அம்மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், காந்த சீனிவாச ராவ் தெரிவித்து உள்ளார்.
அவர், ஆந்திர பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, 68வது இந்திய மருந்து நிறுவனங்கள் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டில், மருந்து தொழிற்சாலைகளை துவக்குவதற்கு, ஆந்திரா, சிறந்த இடமாக உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்து வரும் நடவடிக்கைகளால், சுலபமாக தொழில் புரிவதற்கு சிறந்த இடமாக, ஆந்திரா தேர்வு செய்யப்பட்டு உள்ளது.முதல்வரை, 100 மருந்து நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் சந்தித்து, மருந்து துறையின் முன்னேற்றம் குறித்து பேச உள்ளனர். மேலும், ஐதராபாத்தை அடுத்து, பெரிய நகரமாக விளங்கும், விசாகப்பட்டினத்தில் உள்ள வசதிகள் காரணமாக, பல நிறுவனங்கள் சுகாதார துறையில் களமிறங்க, விருப்பம் தெரிவித்து உள்ளன. எதிர்காலத்தில், விசாகப்பட்டினம், சிறந்த மருந்து தொழிற்சாலை மையமாக மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|