பதிவு செய்த நாள்
20 டிச2016
00:03
புதுடில்லி : கோத்ரெஜ் அப்ளையன்சின் விற்றுமுதல், 3,500 கோடி ரூபாயாக குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த, கோத்ரெஜ் அப்ளையன்ஸ், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், அந்நிறுவனம், 3,500 கோடி ரூபாய் விற்று முதல் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி, இ.வி.பி., கமல் நந்தி கூறியதாவது: எங்கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில், 3,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டியது. நடப்பு நிதியாண்டின் ஏழு மாதங்களில், 26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது, வளர்ச்சி, 15 சதவீதம் என்றளவில் உள்ளது. நடப்பு முழு நிதியாண்டில், கோத்ரெஜ், 3,750 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட திட்டமிட்டது. ஆனால், கடந்த இரு மாதங்களாக, விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், விற்றுமுதல், 3,500 – 3,600 கோடி ரூபாயாக குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது, 150 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதனம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,500 கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, எங்கள் நிறுவனம், குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரிப்பில், களமிறங்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அந்த சாதனம், சோதனை முறையில், டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|