பதிவு செய்த நாள்
20 டிச2016
00:05
புதுடில்லி : மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏலம் மற்றும் ஒதுக்கீட்டு முறையில், பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 72 நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் இணை செயலர் தலைமையிலான குழுவின் கூட்டம், வரும், 21 – 26 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில், ஹிண்டால்கோ, பாரத் அலுமினியம், என்.டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட, ௩௫ நிலக்கரி சுரங்கங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில், ரிலையன்ஸ் சிமென்ட், அல்ட்ரா டெக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாடுகள் குறித்து, 26ம் தேதி ஆய்வு செய்யப்படும். ௮௩ நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்து கிடைத்த, 2,779 கோடி ரூபாய், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|