பதிவு செய்த நாள்
20 டிச2016
00:06
புதுடில்லி : ஐ.டி.சி., நிறுவனம், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
உள்நாட்டை சேர்ந்த, ஐ.டி.சி., நிறுவனம், ஓட்டல், புகையிலை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு, புகையிலை பொருட்களால், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், புகையிலை அல்லாத தொழில்களில், விற்பனையை அதிகரிக்க, ஐ.டி.சி., திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, ஐ.டி.சி., தலைமை செயல்பாட்டு அதிகாரி, சஞ்சீவ் பூரி கூறியதாவது: எங்கள் நிறுவனம், ‘கிளாஸ்மேட், சன்பீஸ்ட், ஆசீர்வாத்’ ஆகிய பிராண்டுகளின் கீழ், நோட்டு புத்தகம், எழுது பொருள், பிஸ்கட், கோதுமை மாவு உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. தொடர்ந்து, பழச்சாறு, காய்கறி, கடல் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய உள்ளது. நுகர்பொருட்கள் துறையில், கடந்த ஆண்டு, ஐ.டி.சி.,யின் மொத்த வருவாய், 28 ஆயிரத்து, 409 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இதில், புகையிலை பொருட்களின் பங்கு, 18 ஆயிரத்து, 685 கோடி ரூபாய்; மற்ற பொருட்கள், 9,723 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, நுகர்பொருட்கள் துறையில், பிராண்டு இல்லாதவை அதிகமாக விற்பனை ஆகின்றன. இருப்பினும், பொருளாதார நிலை முன்னேறி வருவதால், நுகர்வோர்கள் பிராண்டு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட துவங்கி இருக்கின்றனர். எனவே, நாங்களும் அதற்கேற்ப விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக, விரைவில், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|