பதிவு செய்த நாள்
20 டிச2016
00:07
புதுடில்லி : பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைக்க, பல்வேறு விதிமுறைகளை தளர்த்துமாறு, மத்திய அரசுக்கு, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் விபரம்: ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள், ஆடை வடிவமைப்பாளர் முதல், புதிய மாதிரிகளை உருவாக்குவதற்கான ஜவுளி கொள்முதல் வரை, பல நிலைகளில், பணப் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளதால், வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். ஜவுளி பூங்காக்களில் உள்ள வங்கி கிளைகள், போதிய அளவிற்கு ரொக்கம் வைத்திருக்க வேண்டும். ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகள் துறையில், தொழிலாளர்களுக்கு தனி அடையாள அடிப்படையில், வங்கிக் கணக்கு துவக்க வேண்டும். இக்கணக்கை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் கீழ் பராமரிக்க வேண்டும். வங்கிகள், தொழிலாளர்களிடம், ‘பான்’ எனப்படும், வருமான வரி கணக்கு எண் விபரங்களை கோராமல், அதற்கு பதிலாக, அவ்விபரங்களை, நிறுவனர்களிடம் இருந்து பெற வேண்டும்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், தொழிலாளர்களின், பி.எப்., – இ.எஸ்.ஐ., – டி.டி.எஸ்., சேவை வரி போன்றவற்றை செலுத்த அவகாசம் தர வேண்டும். அது போல, மத்திய, மாநில அரசுகளுக்கு கணக்கு விபரங்களை வழங்கவும், கூடுதல் அவகாசம் தர வேண்டும். வங்கிகள், ‘டிபாசிட்’ வட்டியை அதிகரித்தால், வங்கிக் கணக்கில் ரொக்கம் எடுப்பது குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|