குறு, சிறு தொழில் நிறு­வன கடன்; மத்­திய அரசு – மெர்­கன்டைல் வங்கி ஒப்­பந்தம்குறு, சிறு தொழில் நிறு­வன கடன்; மத்­திய அரசு – மெர்­கன்டைல் வங்கி ஒப்­பந்தம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.92 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.92 ...
பண ­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கையால் நிறு­வ­னங்­களின் வளர்ச்சி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2016
23:44

புது­டில்லி : ‘மத்­திய அரசின் பண­ ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கையால், நடப்பு மூன்றாம் காலாண்டில், நுகர்­பொருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் வளர்ச்சி பாதிக்­கப்­பட்­டு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்­டு­களாக, நுகர்­பொருள் தயா­ரிப்பு துறையின் வளர்ச்சி, மந்­த­நி­லையில் இருந்­தது. இந்­தாண்டு, பர­வ­லாக பெய்த பருவமழையால், கிரா­மப்­புற மக்­க­ளிடம் பணப் புழக்கம் சற்று அதி­க­ரித்து, அவர்கள் நுகர்­பொ­ரு­ளுக்­காக கூடு­த­லாக செல­விடும் சூழல் உரு­வா­னது. இத­னி­டையே, ஏழா­வது ஊதியக் குழுவின் பரிந்­து­ரைப்­படி, மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதியம் உயர்ந்து, அவர்­களின் செல­வ­ழிப்பு திறன் அதி­க­ரித்­தது.
தற்­கா­லி­க­மா­னது:இது­ போன்ற கார­ணங்­களால், நுகர்­பொருள் துறை, சிறப்­பாக வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், மத்­திய அரசு, நவ., 8ல் அறி­வித்த பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், இந்த எதிர்­பார்ப்பு பொய்த்து விட்­ட­தாக நுகர்­பொருள் நிறு­வ­னங்கள் கூறி­யுள்­ளன. எனினும், இந்த பாதிப்பு தற்­கா­லி­க­மா­னது என்றும், வரும், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்டில், விற்­பனை சூடு பிடிக்கும் என, அவை நம்பிக்கை தெரி­வித்­துள்­ளன.
சவ்­கதா குப்தா, நிர்­வாக இயக்குனர், மாரிக்கோ: நடப்பு மூன்­றா­வது காலாண்டை விட, நான்­கா­வது காலாண்டில், வளர்ச்சி நன்கு இருக்கும். எனினும், வர்த்­தகம் இயல்பு நிலைக்கு திரும்ப, சில காலம் ஆகும். மொத்த விலை வர்த்­த­கத்தில், அடுத்த ஆண்டு அறி­மு­க­மாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி, குறிப்­பி­டத்­தக்க மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும். நடுத்­தர மற்றும் நீண்ட கால வளர்ச்­சியில் பாதிப்பு இருக்­காது.
விவேக் காம்பீர், நிர்வாக இயக்குனர், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்: இந்­தாண்டு, நுகர்வோர் பொருள் துறைக்கு மோச­மான ஆண்­டாக அமைந்து விட்­டது. பருவ மழைக்கு பின், சிறப்­பான வளர்ச்சி இருக்கும் என, எதிர்­பார்த்த நிலையில், பண­ ம­திப்பு நீக்கம், தற்­கா­லிக பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­நி­லை­யிலும், நடப்பு நிதி­யாண்டில், இத்­துறை, குறைந்த­பட்சம், ஒற்றை இலக்க அளவிலாவது வளர்ச்சி காண்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.
பின்­ன­டைவு:சஞ்சீவ் பூரி, தலைமை செயல் அதி­காரி, ஐ.டி.சி.: பண மதிப்பு நீக்­கத்தால், பணத்­தட்­டுப்­பாடு ஏற்­பட்­டு உள்ளது. இதனால், நுகர்வோர், மொத்தம் மற்றும் சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள், ‘பிராண்டு’ உரி­மை­யா­ளர்கள், தயா­ரிப்­பா­ளர்கள் என, அனைத்து தரப்­பி­னரும், இடர்­பா­டு­களை சந்­தித்­துள்­ளனர். அதனால், நுகர்­பொருள் துறையில் வளர்ச்சி இருக்­காது. ஒரு சில நுகர்­பொ­ருட்­களின் வளர்ச்­சியில், பின்­ன­டைவு ஏற்­ப­டவும் வாய்ப்­புண்டு. அதே­ ச­மயம், இந்த தற்­கா­லிக சவால்­களை சமா­ளித்து, இத்­துறை வளர்ச்சி காணும் என்ற நம்­பிக்­கையும் உள்­ளது.
பெரும்­பான்­மை­யான நுகர்­பொருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், வளர்ச்சி பாதிக்கும் என, கருத்து தெரி­வித்­துள்ள நிலையில், பாபா ராம்­தேவின் பதஞ்­சலி நிறு­வனம், அதன் ஆயுர்­வேத பொருட்­களின் விற்­பனை, வழக்­கத்தை விட, அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)