பதிவு செய்த நாள்
21 டிச2016
16:37
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக 6வது நாளாக சரிவுடன் முடிந்தன. கடந்த மூன்று நாட்களாகவே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின, இன்றும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 86.16 புள்ளிகள் உயர்ந்து 26,394.14-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 30.15 புள்ளிகள் உயர்ந்து 8,112.55-ஆகவும் இருந்தன. ஆனால் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததால் பங்குச்சந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 65.60 புள்ளிகள் சரிந்து 26,242.38-ஆகவும், நிப்டி 21.10 புள்ளிகள் சரிந்து 8,061.30-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் மாருது சுசூகி, என்டிபிசி., ஓஎன்ஜிசி., அல்ட்ரா டெக், ஹிண்டால்கோ, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 1400 நிறுவன பங்குகள் சரிந்தும், சன்பார்மா, ஐடிசி., டிசிஎஸ்., ஆக்சிஸ் வங்கி, பார்த்தி ஏர்டெல் உள்ளிட்ட 1176 பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|