பதிவு செய்த நாள்
21 டிச2016
23:45
கோல்கட்டா : ‘டிவி’ தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், பி.பி.எல்., நிறுவனம், தற்போது, ‘ஸ்மார்ட் டிவி’ சந்தையிலும் இறங்கி இருக்கிறது.
இதையடுத்து, இந்நிறுவனம், குறைந்த விலையில், ‘ஸ்மார்ட் டிவி’க்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, 43 அங்குலம் திரை உள்ள, எல்.இ.டி., ஸ்மார்ட் டிவியை இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதன் விலை, 39,990 ரூபாய். ‘பிளிப்கார்ட்’ வலைதளத்தில் கிடைக்கும் இந்த டிவி, சீனாவின், ‘லிகோ’ மற்றும் இந்தியாவின், ‘மைக்ரோமேக்ஸ்’ டிவி பிராண்டுகளுக்கு, கடும் போட்டியாக இருக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பி.பி.எல்., இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஜித் நம்பியார் கூறுகையில், ‘‘பெரிய தொலைக்காட்சி பிரிவில், குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ள, புதிய டிவி, சந்தையில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும்,’’ என்றார்.
கடந்த ஆண்டு இறுதியில், மீண்டும் நுகர்வோர் சாதனங்கள் பிரிவில் களமிறங்கிய, பி.பி.எல்., ஒரே ஆண்டில், ௭௦ ஆயிரம் டிவிக்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|