பதிவு செய்த நாள்
21 டிச2016
23:46
புதுடில்லி : இந்திய வர்த்தக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, வெளிநாட்டினர் ஏராளமானோர், இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களை காண வருவர். அதுபோல, உள்நாட்டு பயணிகளும், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வர். ஆனால், இந்தாண்டு, கோவா தவிர, இதர சுற்றுலா தலங்கள் அனைத்திலும், பயணிகள் வருகை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலத்துடன் ஒப்பிடும்போது, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் ஓட்டல் முன்பதிவு, முறையே, 65 சதவீதம் மற்றும் 40 – 45 சதவீதம்குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், ஓட்டல் அறை வாடகை, விமான பயண கட்டணம் ஆகியவையும், 30 – 35 சதவீதம் குறைந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|