பதிவு செய்த நாள்
21 டிச2016
23:48
புதுடில்லி : யூ.டி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
யூ.டி.ஐ., மியூச்சுவல் பண்டு, பரஸ்பர நிதி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், பாரத ஸ்டேட் வங்கி, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை, தலா, 18.5 சதவீத பங்குகளை கொண்டுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான, டி ரோ பிரைஸ், 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அடுத்த ஆண்டில், 100 கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம், அடுத்த ஆண்டில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, யூ.டி.ஐ., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லியோ புரி கூறியதாவது: எங்கள் நிறுவனம், 2017ம் ஆண்டின், இரண்டாவது அரையாண்டில், பொதுமக்களுக்கு, பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான, அடுத்தகட்ட பணிக்காக, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஒப்புதல் கிடைத்ததும், பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை பணிக்கான நிறுவனங்கள் நியமிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|