பதிவு செய்த நாள்
22 டிச2016
23:40
மும்பை : பார்தி ஏ.எக்ஸ்.ஏ., காப்பீட்டு நிறுவனம், சிறு, நடுத்தர தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்காக, தனி காப்பீடு திட்டங்களை துவங்க உள்ளது.
தனியார் துறையைச் சேர்ந்த பார்தி ஏ.எக்ஸ்.ஏ., நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சிறு, நடுத்தர தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்காக, சிறப்பு காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி மேபெல் லியுங் கூறியதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், பெண் தொழில் முனைவோரின் பங்கு, ஆண்டுதோறும், 4 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. உள்நாட்டில், மொத்தம் உள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 30 லட்சம் நிறுவனங்களில், பெண் தொழில்முனைவோர்கள் பங்கேற்று நடத்துவதாக தெரியவந்துள்ளது. எனவே, அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சிறப்பு காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். தற்போது, இந்தியாவில், காப்பீட்டு நிறுவனங்கள், பெண்களிடம் இருந்து வசூலிக்கும் மொத்த பிரீமியம் வருவாய், 1,000 கோடி டாலர் என்றளவில் உள்ளது. இது, 2020ல், இரண்டு, மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|