150 மாவட்­டங்­க­ளுக்கு விரி­வாக்கம்; டபுள்யு.ஆர்.எம்.எஸ்., திட்டம்150 மாவட்­டங்­க­ளுக்கு விரி­வாக்கம்; டபுள்யு.ஆர்.எம்.எஸ்., திட்டம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.90 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.90 ...
சோத­னை­களை சாத­னை­க­ளாக மாற்றும் உள்­நாட்டு மருந்து நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2016
23:42

புது­டில்லி : ‘‘இந்­திய மருந்து நிறு­வ­னங்கள், பல்­வேறு சோத­னை­க­ளுக்கு இடை­யிலும், சிறப்­பாக செயல்­பட்டு வரு­கின்­றன,’’ என, இந்­திய மருந்து நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பின் செக­ரட்­டரி, ஜெனரல் திலிப் ஜி.ஷா தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: உள்­நாட்டு மருந்து துறை, இரு முக்­கிய பிரச்­னை­களை சந்­தித்து வரு­கி­றது. இத்­து­றைக்கும், அர­சுக்கும் இடை­யி­லான நம்­பிக்­கை­யின்மை அதி­க­ரித்து உள்­ளது. அதை சரி செய்­வ­தற்­கான இரு­த­ரப்பு பேச்­சிலும், முன்­னேற்றம் ஏது­மில்லை என்­பது தான் வேதனை. இந்­தாண்டு மார்ச்சில், 344 கலவை மருந்­து­களின் விற்­ப­னைக்கு விதிக்­கப்­பட்ட தடை, மருந்து நிறு­வ­னங்­களை அதிர்ச்­சி­அ­டைய வைத்­தது. மத்­திய அரசின், தன்­னிச்­சை­யான இந்த முடிவை எதிர்த்து, மருந்து நிறு­வ­னங்கள், டில்லி ஐகோர்ட்டில் முறை­யிட்டு, நிவா­ரணம் பெற்­றுள்­ளன. அது போல, மருந்­து­களின் விலைக்கு கட்­டுப்­பாடு விதித்­துள்­ளதும், சம்­பந்­தப்­பட்ட மருந்து நிறு­வ­னங்­களை பாதித்­துள்­ளது.
கடந்த ஓராண்டில் மட்டும், விலை மற்றும் ஒழுங்­கு­முறை கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக, 400 மருந்து நிறு­வ­னங்கள், நீதி­மன்­றத்தை நாடி­யுள்­ளன. மருந்­து­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடையால், பல நிறு­வ­னங்­களின் விற்­பனை பாதிக்­கப்­பட்டு உள்­ளது. இருந்த போதிலும், கடந்த நவ., வரை­யி­லான ஓராண்டில், மருந்து துறை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. எனினும், மருந்து நிறு­வ­னங்கள் சந்­தித்த பிரச்­னை­களால், இதே வளர்ச்சி, நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், தொட­ருமா என, தெரி­ய­வில்லை.
அதே சமயம், இந்­திய மருந்து நிறு­வ­னங்­களின் ஏற்­று­மதி நன்கு இருக்கும் என, தெரி­கி­றது. இதற்கு, அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்­ளிட்ட வளர்ந்த நாடுகள், தர­மான, பாது­காப்­பான, நியா­ய­மான விலையில் மருந்­து­களை இறக்­கு­மதி செய்ய விரும்­பு­வது தான் காரணம். அத்­த­கைய தகு­திகள், இந்­தி­யாவின் மூல மருந்­து­க­ளுக்கு உள்­ளதால், அவற்­றுக்­கான தேவை, வளர்ந்த நாடு­களில் அதி­க­ரித்து வரு­கி­றது.
வளர்ந்த நாடுகள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு செல­வு­களை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு உள்­ளன. இது, இந்­திய மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு, சிறப்­பான வர்த்­தக வாய்ப்பை ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்­ளது. மருந்து துறையில், அரசு அனு­மதி சாரா பிரிவில், அன்­னிய நேரடி முத­லீட்டு வரம்பை, 74 சத­வீ­த­மாக மத்­திய அரசு உயர்த்­தி­யி­ருப்­பதால், வெளி­நாட்டு நிறு­வ­னங்கள், இந்­திய மருந்து நிறு­வ­னங்­களில், அதி­க­ளவில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. அது போல, இந்­திய மருந்து நிறு­வ­னங்­களும், வெளி­நாட்டு மருந்து நிறு­வ­னங்­களை கைய­கப்­ப­டுத்தி, வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்தி வரு­கின்­றன. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)