பதிவு செய்த நாள்
23 டிச2016
09:55
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (டிசம்பர் 23), இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. உலக பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, ஆசிய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் நேற்றைய சரிவான போக்கே இன்றும் தொடர்கிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 30.86 புள்ளிகள் சரிந்து 25,948.74 புள்ளிகளாகவும், நிப்டி 8.35 புள்ளிகள் சரிந்து 7970.75 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடிசி, ஹச்.டி.எப்.சி., டாடா மோட்டார்ஸ், அதானி போட்ஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|