பதிவு செய்த நாள்
23 டிச2016
14:45
புதுடில்லி : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ரூ.999-க்கு விமான டிக்கெட்களை சலுகை கட்டணத்தில் வழங்குவதாக விமான நிறுவனங்கள் பலவும் அறிவித்துள்ளன.
கோ ஏர் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, சலுகை கட்டண டிக்கெட்டுகள் ரூ.999-ல் இருந்து தொடங்கி, பயணத்திட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஜனவரி மாதம் 9-ம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை இந்தியாவின் எந்த பகுதிகளுக்கும் இந்த சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம். டிசம்பர் 31-ம் தேதிவரை இதற்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம். முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று இண்டிகோ நிறுவனமும் ரூ.999 க்கு விமான டிக்கெட்களை வழங்க உள்ளது. இந்த சலுகை 2017 ம் ஆண்டு ஜனவரி 9 முதல் ஏப்ரல் 15 வரை பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்வோருக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பயண தூரத்திற்கு தகுந்தால் போல் மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்ஏசியா இந்தியா நிறுவனமம் புத்தாண்டு சலுகையாக ரூ.917 க்கு விமான டிக்கெட்களை வழங்க உள்ளது. இந்த சலுகை 2017 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. மார்ச் 1 முதல் அக்டோபர் 31 வரை பயணம் செய்பவர்களுக்கு இந்த சலுகை கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|