பதிவு செய்த நாள்
26 டிச2016
23:39
மும்பை : மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பால், பிஸ்கட் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதாக, பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில், பிஸ்கட் விற்பனையில், பார்லே நிறுவனம், முன்னணியில் உள்ளது. மத்திய அரசு, செல்லாத நோட்டு அறிவிப்பை, நவ., 8ல் வெளியிட்டது. இதனால், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதையடுத்து, பிஸ்கட் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதாக, பார்லே நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் உயரதிகாரி, மயாங்க் ஷா கூறியதாவது: இந்தியாவில், பிஸ்கட் துறையின் சந்தை மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 40 சதவீதம் உள்ளது. நடப்பாண்டில், பிஸ்கட் விற்பனை, 5 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது. பருவமழை சீசனுக்கு பின், பிஸ்கட் விற்பனை நன்கு இருக்கும். ஆனால், மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால், கடந்த இரு மாதங்களாக, அவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. பருவமழை பொய்த்ததால், ஊரக பகுதிகளில், பிஸ்கட் விற்பனை மந்தமாக உள்ளது. அடுத்த ஆண்டில், பிஸ்கட் விற்பனை சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|