பதிவு செய்த நாள்
26 டிச2016
23:40
புதுடில்லி : ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 3,000 கோடி டாலராக அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு என, பல நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மத்திய அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளில், 3,000 கோடி டாலர் மதிப்புக்கு, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மத்திய அரசு, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.
இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர், அசோக் ராஜானி கூறியதாவது:மத்திய அரசு, தரமான, புதிய வடிவில் ஆடைகள் தயாரிக்க, பல்வேறு, சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம், இந்திய ஆடைகளை, பல நாடுகளை சேர்ந்தவர்கள் வாங்குவர். அடுத்த ஆண்டில், ஜவுளித் துறை சிறப்பான வளர்ச்சி காண தயார் நிலையில் உள்ளது. தற்போது, இந்தியாவின் ஏற்றுமதி, 1,700 கோடி டாலர் என்றளவில் உள்ளது. இதை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 3,000 கோடி டாலராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, சிறப்பு ஊக்கத்தொகை திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|