பதிவு செய்த நாள்
28 டிச2016
00:03
மும்பை: காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில், மும்பையில், ‘காதி கண்காட்சி’ துவங்கி உள்ளது. இதில், மஹாராஷ்டிராவின், குக்கிராமங்களைச் சேர்ந்த கைவினைஞர்களின் படைப்புகள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி உஷா சுரேஷ் கூறியதாவது:கிராமப்புற கைவினைஞர்களின் கலைப் படைப்புகள், பலரையும் சென்றடைய வேண்டும் என்ற, நோக்கில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இது, கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் துணை புரியும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், காதி பொருட்கள் துறைக்கு பெரிய பாதிப்பு இல்லை. அனைத்து விற்பனை நிலையங்களிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, டில்லியில் உள்ள, காதி பவனில், சில்லரை விற்பனையில், 91 சதவீதம் டிஜிட்டல் முறையில் தான் நடைபெறுகிறது. ரொக்கமற்ற பரிவர்த்தனை, லஞ்ச ஊழலை ஒழிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|