பதிவு செய்த நாள்
28 டிச2016
00:04
புதுடில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகள், அவற்றுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு வசதியாக, மத்திய வர்த்தக அமைச்சகம், ஜி.இ.எம்., என்ற வலைதளசந்தையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சந்தையில், பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், 1,600 நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன.
இந்த வலைதள சந்தையில், 86 பிரிவுகளின் கீழ், நான்காயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் உள்ளன. அவற்றை கொள்முதல் செய்வதற்கு, அரசு துறைகளைச் சார்ந்த, 1,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பதிவு செய்துள்ளனர்.
அரசு துறைகளின் அன்றாட தேவைகளுக்கான போக்குவரத்து சேவைகளையும், இந்த வலைதள சந்தை வழங்குகிறது. ஏற்கனவே, இச்சந்தை, 45 கோடி ரூபாய்அளவிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|