பதிவு செய்த நாள்
28 டிச2016
00:04
மும்பை: கடந்த நிதியாண்டில், வங்கிகளின், ‘டிபாசிட்’ நிலவரம் குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:கடந்த மார்ச்சுடன் முடிந்த, 2015 – 16ம் நிதியாண்டில், வங்கிகள், மொத்தம் 98,41,290 கோடி ரூபாய் டிபாசிட் திரட்டியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டில், 89,72,710 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த டிபாசிட்டில், குடும்பங்கள், பொது மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பு, முறையே, 61.5 சதவீதம், 12.8 சதவீதம் மற்றும் 10.8 சதவீதம் என்றளவில் உள்ளன. மொத்த டிபாசிட்டுகளில், குறித்த கால டிபாசிட், 63.8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு டிபாசிட், 34.9 சதவீதத்தில் இருந்து, 36.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வங்கிகள் திரட்டிய டிபாசிட்டில், பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களின் பங்களிப்பு, முறையே, 51.5, 22.8 மற்றும் 15.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நகரங்களில், குறித்த கால டிபாசிட் பிரிவிலும், கிராமங்களில், சேமிப்பு கணக்கு பிரிவிலும், அதிகளவில் டிபாசிட் திரட்டப்பட்டு உள்ளன.
டிபாசிட் திரட்டியதில், பொதுத் துறை வங்கிகள், 70.6 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளன; தனியார் வங்கிகள், 21.6 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. மொத்த டிபாசிட்டில், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட, ஏழு மாநிலங்களின் பங்களிப்பு, 66 சதவீதமாக உள்ளது. அதில், மஹாராஷ்டிராவின் பங்களிப்பு மட்டும், 23 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|