பதிவு செய்த நாள்
28 டிச2016
00:05
புதுடில்லி: ஸ்மார்ட் போன் விற்பனையில் ஈடுபட்டு வரும், சீனாவைச் சேர்ந்த, ஒப்போ நிறுவனம், 21.60 கோடி டாலர் முதலீட்டில், டில்லி அருகே உள்ள, கிரேட்டர் நொய்டாவில், தொழில் பூங்காவை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர், ஸ்கை லி கூறியதாவது:நொய்டாவில், 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தொழில் பூங்காவில், நிறுவனம், 21.6௦ கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது.
நிறுவனத்திற்கு, கிரேட்டர் நொய்டாவில், ஏற்கனவே மொபைல் போன் தயாரிப்பு ஆலை உள்ளது. தற்போது, எலக்ட்ரானிக் பிரின்டட் சர்க்யூட் போர்டுகளை தயாரிக்கும் மையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், வரும் பிப்ரவரியில் முடிவடையும். நாங்கள், தரமான ஸ்மார்ட் போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதால், சந்தையில் நல்ல நிலையில் உள்ளோம்.
இந்திய சந்தையில், போட்டியை சமாளிக்க, தரமான வாழ்க்கை, நவீன நாகரிகத்தை நாடும் இளம் தலைமுறையினரை இலக்காக கொண்டு, எங்கள் தயாரிப்புகளை வடிவமைத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|