பதிவு செய்த நாள்
28 டிச2016
00:05
ஐதராபாத்: தெலுங்கானாவில் அமைக்கப்பட்டு வரும், ‘பார்மா சிட்டி’ யை, 2018ல், செயல்பாட்டுக்கு கொண்டு வர, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில், மருந்து பொருட்கள் உற்பத்தியில், பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு, மருந்து பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கொண்ட, பார்மா சிட்டி ஒன்றை அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து, தெலுங்கானா மாநில தொழில் துறை அமைச்சர், கே.டி.ராமா ராவ் கூறியதாவது:பார்மா சிட்டியில் தொழிற்சாலைகள் அமைக்க, பல நிறுவனங்கள், 8,500 ஏக்கர் நிலம் கேட்டு, விண்ணப்பம் அளித்துள்ளன. இதுவரை, 5,600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நகரம், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும். இதன் மூலம் நேரடியாக ஒரு லட்சம் பேருக்கும்; மறைமுகமாக, இரண்டு லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும். பார்மா சிட்டியின் ஒரு பகுதி, 2018ல் செயல்பாட்டுக்கு வரும். தெலுங்கானாவில், புதிய தொழிற்சாலைகள் மூலம் ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|