பதிவு செய்த நாள்
28 டிச2016
00:06
மும்பை: ஜி.ஆர்., இன்ப்ரா, சங்கரா பில்டிங் ஆகிய நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டுமான துறையில் ஈடுபட்டு வரும், ஜி.ஆர்., இன்ப்ரா புராஜக்ட்ஸ், சங்கரா பில்டிங் பிராடக்ட்ஸ் ஆகியவை, விரிவாக்க நடவடிக்கை யில் ஈடுபட உள்ளன.
இதற்காக, அந்நிறுவனங்கள், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. அதற்கு அனுமதி கேட்டு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம், இரு நிறுவனங்களும், செப்., 29ல் விண்ணப்பித்தன. அதற்கு, தற்போது, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, ஜி.ஆர்., இன்ப்ரா, 240 கோடி ரூபாய் மதிப்புக்கு,பங்குகளை வெளியிட உள்ளது.இந்நிறுவனத்தின், பங்கு வெளியீட்டு மேலாண்மை பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், மோதிலால் ஆஸ்வால் உள்ளிட்டவை மேற்கொள்ள உள்ளன. பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டும் நிதியை, ஜி.ஆர்., நிறுவனம், புதிய கருவிகள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு செலவிட உள்ளது.
சங்கரா பில்டு பிராடக்ட்ஸ், 500 கோடி ரூபாய்க்கு பங்குகள் வெளியிட உள்ளது. நடப்பாண்டில், இதுவரை, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல், எல் அண்ட் டி டெக்னாலஜி உள்ளிட்ட, 27 நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|