ஜி.ஆர்., இன்ப்ரா, சங்­கரா பில்டிங் பங்கு வெளி­யீட்­டுக்கு ஒப்­புதல்ஜி.ஆர்., இன்ப்ரா, சங்­கரா பில்டிங் பங்கு வெளி­யீட்­டுக்கு ஒப்­புதல் ... ரூபாயின் மதிப்பு சரிவு - மீண்டும் ரூ.68-ல் வர்த்தகம் ரூபாயின் மதிப்பு சரிவு - மீண்டும் ரூ.68-ல் வர்த்தகம் ...
‘டிஜிட்டல்’ பண பரி­வர்த்­த­னையில் உரம் விற்­ப­னையை துவக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2016
00:06

கூர்கான்: ‘‘அடுத்த இரு மாதங்­களில், விவ­சாய பயிர்­க­ளுக்­கான உரங்கள், விதைகள் விற்­ப­னை­யிலும், ‘டிஜிட்டல்’ எனப்­படும், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்,’’ என, மத்­திய ரசா­யனம் மற்றும் உரத்­துறை அமைச்சர் அனந்த குமார் தெரி­வித்து உள்ளார்.மத்­திய அரசு, ரொக்­க­மில்லா பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்கும் நோக்கில், ‘அதிர்ஷ்ட வாடிக்­கை­யாளர் திட்டம்’ மற்றும் ‘டிஜிட்டல் நிதி வியா­பா­ரிகள் திட்டம்’ என, இரு பரிசு திட்­டங்­களை அறி­வித்­துள்­ளது.மேலும், நாடு தழு­விய அளவில், ரொக்­க­மில்லா பணப் பரி­வர்த்­தனை குறித்தவிழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்­தையும் மேற்­கொண்டுள்­ளது.அதன்­படி, நாட்­டி­லேயே முதன்­மு­த­லாக, ஹரி­யானா மாநிலம், கூர்கான் நகரில், ‘டிஜிதன் மேளா’ என்ற மின்­னணு பரி­வர்த்­தனை விழிப்­பு­ணர்வு கண்­காட்சி துவங்­கி உள்­ளது. இதற்­கான விழாவில், மத்­திய அமைச்சர் அனந்த குமார், ஹரி­யானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டனர். விழாவில், அனந்த குமார் பேசி­ய­தா­வது:ஹரி­யானா முழு­வதும், மின்­னணு கலா­சார மாநி­ல­மாக மாறி வரு­வது பாராட்­டத்­தக்­கது. இம்­மா­நிலம், ‘பெண் குழந்­தை­களை காப்போம்; பெண் குழந்­தை­க­ளுக்கு கல்வி புகட்­டுவோம்’ என்ற திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நடத்தி, நாட்­டிற்கே முன்­னு­தா­ர­ண­மாக திகழ்­கி­றது. அத்­துடன், பத்­தி­ரப்­ப­திவு, கலால் வரி கணக்கு தாக்கல் உள்­ளிட்ட, 170க்கும் மேற்­பட்ட அரசு சேவை­களை, மின்­னணு முறையில் மேற்­கொள்­கி­றது. தற்­போது, மின்­னணு பரி­வர்த்­தனைவிழிப்­பு­ணர்வு கண்­காட்­சி­யையும், முதன்­முதலாக நடத்­து­கி­றது.இக்­கண்­காட்­சியில், காய்­க­றிகள் முதல், குளிர்­சா­தன பெட்டி வரை, அனைத்து பொருட்­க­ளையும் ரொக்­க­மில்லா மின்­னணு முறையில் வாங்கும் வசதி செய்­யப்­பட்டு உள்­ளது.அத்­துடன், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை எவ்­வாறு மேற்­கொள்­வது என்­பது குறித்தும் கற்றுத் தரப்­ப­டு­கி­றது. இதனால், சாதா­ரண மக்­களும், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை சுல­ப­மாக மேற்­கொள்ள முடியும்.மத்­திய அரசு, உரங்கள் மொத்த விற்­பனை மற்றும் சில்­லரை விற்­ப­னை­யிலும், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை வச­தியை ஏற்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது. இதன்­படி, அனைத்து உர முக­வர்கள் மற்றும் சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள், அடுத்த இரு மாதங்­களில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறுவர். விவ­சா­யி­களும், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை மூலம் உரம் மற்றும் விதைகள் வாங்­கலாம். அதே சமயம், வழக்கம் போல ரொக்­கத்தில் வாங்கும் வச­தியும் நீடிக்கும். விவ­சா­யிகள், தங்­க­ளுக்கு விருப்­ப­மான பரி­வர்த்­த­னையை தேர்வு செய்­யலாம். நாடு முழு­வதும், 100 நக­ரங்­களில், 2017 ஏப்., 14 வரை, மின்­னணு பரி­வர்த்­தனை விழிப்­பு­ணர்வு கண்­காட்சி நடை­பெறும். இதன் மூலம், விவ­சா­யிகள் உட்­பட ஏரா­ள­மானோர், ரொக்­க­மில்லா பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறுவர் என, எதிர்­பார்க்­கப்­படு­கி­றது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)