பதிவு செய்த நாள்
28 டிச2016
23:24
புதுடில்லி : ரிலையன்ஸ் குழுமத்தின், ஆர்ஜியோ இன்போகாம் நிறுவனம், செப்., 5ல், மொபைல் போன் சேவையை துவக்கியது.
அப்போது, டிச., இறுதி வரை, இலவச சேவை வழங்கப்படும் என, தெரிவித்த ஆர்ஜியோ, சமீபத்தில், புத்தாண்டு சலுகையாக, இலவச சேவை, 2017 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏர்டெல் நிறுவனம், ‘90 நாட்கள் மட்டுமே இலவச சேவை வழங்க முடியும் என்ற விதிமுறையை, ஆர்ஜியோ மீறுகிறது’ என, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’யில் புகார் அளித்தது.
இது தொடர்பாக, விளக்கம் கோரிய டிராயிடம், ‘அது வேறு; இது வேறு’ என, ஆர்ஜியோ அதிகாரிகள் நேரில் விளக்கம் அளித்தனர். ‘மார்ச் வரையிலான இலவச சலுகையில், தினமும், 1 ஜி.பி.,க்கு மேற்பட்ட பயன்பாட்டிற்கு, கட்டணம் வசூலிக்கப்படும். பழைய திட்டத்தில், இந்த கட்டுப்பாடு கிடையாது’ என, அவர்கள் விளக்கினர். இது தொடர்பாக, விரிவான பதில் அறிக்கையை, ஆர்ஜியோ இன்று டிராயிடம் வழங்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|