இல­வச சலுகை நீட்­டிப்பு விவ­காரம்; ஆர்­ஜியோ இன்று ‘டிராய்’க்கு பதில்இல­வச சலுகை நீட்­டிப்பு விவ­காரம்; ஆர்­ஜியோ இன்று ‘டிராய்’க்கு பதில் ... பிரீ­மியம் பிரிவில் நுழையும் கூல்­பேடு போன் நிறு­வனம் பிரீ­மியம் பிரிவில் நுழையும் கூல்­பேடு போன் நிறு­வனம் ...
‘எம் – வாலட்’ வாயி­லான பரி­வர்த்­தனை நான்கு மடங்கு அதி­க­ரிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2016
23:26

ஐத­ராபாத் : ‘மத்­திய அரசின், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், ‘எம் – வாலட்’ எனப்­படும் மின்­னணு பணப் பை வாயி­லான பரி­வர்த்­தனை, குறு­கிய காலத்தில் நான்கு மடங்கு உயரும்’ என, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.
அதன் விபரம்: இந்­தி­யாவில், ஸ்மார்ட் போன் மற்றும் அதன் வாயி­லாக இணை­யத்தை பயன்­ப­டுத்­துவோர் பெருகி வரு­வது, மின்­னணு துறையின் சீரிய வளர்ச்­சிக்கு வழி வகுத்­துள்­ளது.
நடவடிக்கைகள்ஸ்மார்ட் போனில், மின்­னணு பணப் பைகள் வாயி­லான பணப் பரி­மாற்­றங்கள் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன. பல்­வேறு பொருட்­களை வாங்­கவும், ஒரு­வ­ருக்கு ஒருவர் பணப் பரி­மாற்றம் செய்து கொள்­ளவும், இந்த மின்­னணு பணப் பைகள் உத­வு­கின்­றன. இவற்றின் வாயி­லாக நடை­பெற்ற பரி­வர்த்­த­னை­களின் மதிப்பு, கடந்த, 2012 – 13ம் நிதி­யாண்டில், 1,000 கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 20 மடங்கு உயர்ந்து, 2015 – 16ம் நிதி­யாண்டில், 20 ஆயி­ரத்து, 600 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது. இத்­த­கைய சூழலில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க மத்­திய அரசு எடுத்து வரும் நட­வ­டிக்­கைகள், அறி­வித்­துள்ள சலு­கைகள் ஆகி­ய­வற்றால், மின்­னணு பணப்பை வாயி­லான பரி­வர்த்­தனை, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 200 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 2021 – 22ம் நிதி­யாண்டில், 275 லட்சம் கோடி ரூபா­யாக உயரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இதே காலத்தில், ஸ்மார்ட் போன் வாயி­லான, மொத்த பணப் பரி­வர்த்­த­னையில், மின்­னணு பணப் பையின் பங்­க­ளிப்பு, 20 சத­வீ­தத்தில் இருந்து, 57 சத­வீ­த­மாக அதி­க­ரிக்கும்.
பூர்த்தி செய்யும்பணப் பரி­வர்த்­த­னைகள் எண்­ணிக்கை, 300 கோடியில் இருந்து, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 130 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 46 ஆயிரம் கோடி­யாக உயரும்.பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்குப் பின், மின்­னணு பணப் பை வாயி­லான, மக்­களின் சரா­சரி செல­வினம் அதி­க­ரித்து, 500 – 700 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது; இது, விரைவில், 2,000 – 10 ஆயிரம் ரூபாய் என்ற அள­விற்கு உயரும். திரும்பப் பெறப்­பட்ட செல்­லாத ரூபாய் நோட்­டு­க­ளுக்கு நிக­ராக, புதிய ரூபாய் நோட்­டுகள் வெளி­யி­டப்­ப­டாது என்­பதால், அந்த இடை­வெ­ளியை, ரொக்­க­மில்­லாத, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைகள் பூர்த்தி செய்யும். இது, மின்­னணு பணப் பை துறையின் வளர்ச்­சிக்கு உதவும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
அதி­க­ரிக்கும்மொபைல் போன் சார்ந்த பணப் பரி­மாற்­றத்தில், வங்­கிகள் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட பணப் பரி­வர்த்­த­னை­களின் பங்­க­ளிப்பு, 2013 – 14ம் நிதி­யாண்டில், 8 சத­வீதம் என்ற அள­விற்கே இருந்­தது. இது, நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், 56 சத­வீ­த­மாக அதி­க­ரிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)