பதிவு செய்த நாள்
30 டிச2016
04:34
புதுடில்லி : இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனையில் ஈடுபட்டு வரும், சீனாவைச் சேர்ந்த, கூல்பேடு நிறுவனம், பிரீமியம் பிரிவில் கால்பதித்து உள்ளது. முதற்கட்டமாக, 40 ஆயிரம் ரூபாய் விலையில், ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து, கூல்பேடு இந்தியா நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி சையத் தஜுதின் கூறியதாவது: நிறுவனம், 13,999 ரூபாய் மதிப்பில், ‘கூல் 1’ ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்துடன், வரும் மாதங்களில், சிறந்த அம்சங்களுடன், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, ஸ்மார்ட் போனையும் வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் இதுவரை, கிட்டத்தட்ட, 30 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளோம். இந்தியா மற்றும் சீனாவில், குறைந்த மற்றும் அதிக விலையுள்ள ஸ்மார்ட் போன் தயாரிப்பில், ‘டாப் – 5’ பட்டியலில் இடம் பெற திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|