பதிவு செய்த நாள்
30 டிச2016
04:35
மும்பை : என்.எஸ்.இ., என, சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய பங்குச் சந்தை, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இதற்கான ஆவணங்கள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அளிக்கப்பட்டு உள்ளன.
செபியின் அனுமதியைத் தொடர்ந்து, பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும். இது, அடுத்த ஆண்டின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை, 11 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்பனை செய்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. கடந்த, 2010ல், பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியது. இதையடுத்து, என்.எஸ்.இ., மிக அதிக தொகையை பங்கு வெளியீட்டில் திரட்ட உள்ளது. மும்பை பங்குச்சந்தையும், புதிய பங்கு வெளியீட்டில் இறங்கி, 1,500 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. பங்கு பராமரிப்பு சேவையில் ஈடுபட்டு வரும், சி.டி.எஸ்.எல்., நிறுவனமும், 3.50 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|