பதிவு செய்த நாள்
30 டிச2016
04:36
கோவை : திருப்பூர் சாய தொழில் துறைக்கு உதவ, மத்திய அரசு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜவுளி உற்பத்திக்கு, திருப்பூர் முக்கிய மையமாக உள்ளது. அங்கு, ஜவுளி தொழில் மூலம், ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில், திருப்பூரின் பங்கு, 24 சதவீதம் என்றளவில் உள்ளது. திருப்பூரில், சாய கழிவை வெளியேற்றுதல் உள்ளிட்ட பிரச்னைகளால், தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு உதவ, மத்திய அரசு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய ஜவுளித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருப்பூர் சாய தொழில் துறையினர், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வந்தனர். இதனால், ஜவுளித் துறை பரிந்துரையின் பேரில், நிதி அமைச்சகம், 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியின் மூலம், திருப்பூரில், சாயக்கழிவுகளை வெளியேற்ற, 18 பொது கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், இத்தொழில் துறையினருக்கு, வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|