பதிவு செய்த நாள்
30 டிச2016
04:37
மும்பை : வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவதற்கான சலுகை, மேலும், 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, ஏற்கனவே, கடனை திரும்ப செலுத்த, 60 நாட்கள் சலுகை அளித்த நிலையில், தற்போதைய அறிவிப்பால், வங்கியில் கடன் பெற்றோர், மொத்தம், 90 நாட்களுக்கு கடனை திரும்ப செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். ‘இந்தாண்டு, நவ., 1 – டிச., 31 வரையிலான காலத்தில், கடனை திரும்பச் செலுத்த வேண்டியவர்களுக்கு மட்டுமே, இச்சலுகை பொருந்தும்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, நவ., ௮ல், உயர் மதிப்பு பணம் செல்லாது என, அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டால், வங்கி கடனை திரும்ப செலுத்துவதற்கு, ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. கடந்த வாரம், விவசாயிகள், வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான சலுகை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|