வங்கி கடனை திரும்ப செலுத்த ரிசர்வ் வங்கி சலுகை நீட்­டிப்புவங்கி கடனை திரும்ப செலுத்த ரிசர்வ் வங்கி சலுகை நீட்­டிப்பு ... ஒடிசா சிறப்பு பொரு­ளா­தார மண்­டலம்; முத­லீட்டை எதிர்­பார்க்கும் டாடா ஸ்டீல் ஒடிசா சிறப்பு பொரு­ளா­தார மண்­டலம்; முத­லீட்டை எதிர்­பார்க்கும் டாடா ... ...
நாட்டின் முதல் மருந்து நிறு­வ­னத்தை விற்­ப­தற்கு அரசு அனு­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2016
04:38

புது­டில்லி : இந்­தி­யாவில், முதன்­மு­த­லாக மருந்து தயா­ரிப்பில் ஈடு­பட்டு, தற்­போது நலி­வ­டைந்­துள்ள, பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்­மா­சூ­டிக்கல்ஸ், இந்­துஸ்தான் ஆன்­டி­ப­யோடிக்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பெரும்­பான்மை பங்­கு­களை விற்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் அளித்­துள்­ளது.
இத்­துடன், நலி­வுற்ற, ஐ.டி.பி.எல்., – ஆர்.டி.பி.எல்., ஆகிய மருந்து நிறு­வ­னங்­களை மூடவும், ஒப்­புதல் அளிக்­கப்­பட்டு உள்­ளது. முதற்­கட்­ட­மாக, மேற்­கண்ட நான்கு நலி­வுற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு சொந்­த­மான உபரி நிலம் விற்­பனை செய்­யப்­பட்டு, அவற்றின் கடன்கள் அடைக்­கப்­படும். ஏல முறை விற்­பனை மூலம் கிடைக்கும் தொகை, சுய­வி­ருப்ப ஓய்வில் செல்லும் ஊழி­யர்­க­ளுக்கு அளிக்­கவும் பயன்­ப­டுத்திக் கொள்­ளப்­படும்.கடந்த, 2003 – 04ம் நிதி­யாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஜெஸாப் அண்ட் கோ நிறு­வ­னத்தின் பெரும்­பான்மை பங்­கு­களை, மத்­திய அரசு, தனி­யா­ருக்கு விற்­பனை செய்­தது. இதை­ய­டுத்து, 12 ஆண்­டு­க­ளுக்கு பின், கடந்த செப்­டம்­பரில், பாரத் பம்ப்ஸ் அண்ட் கம்­ப­ரசர்ஸ் நிறு­வ­னத்தின் பெரும்­பான்மை பங்­கு­களை விற்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் அளித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
பிர­பல விஞ்­ஞா­னி­யான, ஆச்­சார்யா பிர­புல்லா சந்­திர ராய், 1901 ஏப்­ரலில், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்­மா­சூ­டிக்கல்ஸ் ஒர்க்கஸ் நிறு­வ­னத்தை, கோல்­கட்­டாவில் துவக்­கினார். இதன் நிர்­வா­கத்தை, 1977ல் கைப்­பற்­றிய மத்­திய அரசு, 1981ல், பொதுத் துறை நிறு­வ­ன­மாக மாற்றி, பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்­மா­சூ­டிக்கல்ஸ் என, பெயர் சூட்­டி­யது. இத்­தொ­ழிற்­சா­லையில், மலே­ரியா நோய்க்­கான குளோ­ரோகுய்ன், பாரா­செட்­டமால் உள்­ளிட்ட மருந்­துகள் தயா­ரிக்­கப்­பட்டு வந்­தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)