பதிவு செய்த நாள்
30 டிச2016
04:38
புதுடில்லி : இந்தியாவில், முதன்முதலாக மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு, தற்போது நலிவடைந்துள்ள, பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிக்கல்ஸ், இந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை விற்க, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்துடன், நலிவுற்ற, ஐ.டி.பி.எல்., – ஆர்.டி.பி.எல்., ஆகிய மருந்து நிறுவனங்களை மூடவும், ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, மேற்கண்ட நான்கு நலிவுற்ற நிறுவனங்களுக்கு சொந்தமான உபரி நிலம் விற்பனை செய்யப்பட்டு, அவற்றின் கடன்கள் அடைக்கப்படும். ஏல முறை விற்பனை மூலம் கிடைக்கும் தொகை, சுயவிருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு அளிக்கவும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.கடந்த, 2003 – 04ம் நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஜெஸாப் அண்ட் கோ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை, மத்திய அரசு, தனியாருக்கு விற்பனை செய்தது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பின், கடந்த செப்டம்பரில், பாரத் பம்ப்ஸ் அண்ட் கம்பரசர்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல விஞ்ஞானியான, ஆச்சார்யா பிரபுல்லா சந்திர ராய், 1901 ஏப்ரலில், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிக்கல்ஸ் ஒர்க்கஸ் நிறுவனத்தை, கோல்கட்டாவில் துவக்கினார். இதன் நிர்வாகத்தை, 1977ல் கைப்பற்றிய மத்திய அரசு, 1981ல், பொதுத் துறை நிறுவனமாக மாற்றி, பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிக்கல்ஸ் என, பெயர் சூட்டியது. இத்தொழிற்சாலையில், மலேரியா நோய்க்கான குளோரோகுய்ன், பாராசெட்டமால் உள்ளிட்ட மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|