ஒடிசா சிறப்பு பொரு­ளா­தார மண்­டலம்; முத­லீட்டை எதிர்­பார்க்கும் டாடா ஸ்டீல்ஒடிசா சிறப்பு பொரு­ளா­தார மண்­டலம்; முத­லீட்டை எதிர்­பார்க்கும் டாடா ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.94 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.94 ...
மின்­னணு பண பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க சேவை வரி விலக்கை நீட்­டிக்க பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2016
04:40

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், ‘டிஜிட்டல்’ எனப்­படும் மின்­னணு வாயி­லான பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, அளிக்­கப்­பட்டு வரும் சேவை வரி விலக்கை, தொடர்ந்து நீட்­டிக்க வேண்டும்’ என, ஆந்­திர முதல்வர் சந்­தி­ர­பாபு நாயுடு தெரி­வித்­துள்ளார்.
நிதிச் செயல்­பா­டு­களில் வெளிப்­படைத் தன்­மையை அதி­க­ரிக்­கவும், மக்­க­ளி­டையே வங்கிச் சேவையை பர­வ­லாக்­கவும், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை, மத்­திய அரசு ஊக்­கு­விக்­கி­றது. மக்கள், ரொக்க பயன்­பாட்டை குறைத்து, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறு­வ­தற்­கான கொள்கை திட்டம் வகுக்க, ஆந்­திர முதல்வர் சந்­தி­ர­பாபு நாயுடு தலை­மையில், பல மாநில முதல்­வர்­களை கொண்ட, உயர்­மட்டக் குழுவை, மத்­திய அரசு அமைத்­துள்­ளது.
டில்­லியில் நடை­பெற்ற, இக்­கு­ழுவின் கூட்­டத்தை தொடர்ந்து, சந்­தி­ர­பாபு நாயுடு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசி­ய­தா­வது: மின்­னணு பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான செயல் திட்­டங்கள் குறித்து, கூட்­டத்தில் ஆலோ­சிக்­கப்­பட்­டது. பெரும்­பான்­மை­யான இந்­தி­யர்­களை மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாற்ற, ஊக்க சலு­கை­க­ளுடன் கூடிய, நீண்ட கால கொள்கை திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போ­துள்ள அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை பயன்­ப­டுத்தி, ‘ஆதார்’ அடை­யாள எண் மற்றும் மேம்­பட்ட, யு.பி.ஐ., தொழில்­நுட்பம் மூலம், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்ளும் வசதி விரைவில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இத்­துடன், கோடிக்­க­ணக்­கான மக்கள் மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை சுல­ப­மாக மேற்­கொள்ள தேவை­யான, தொழில்­நுட்ப வசதி, பரி­வர்த்­தனை திறன் ஆகி­ய­வையும் மேம்­ப­டுத்­தப்­படும்.
தற்­போது, சாதா­ரண மொபைல் போனிலும் பணப் பரி­வர்த்­தனை செய்­வ­தற்­கான அப்­ளி­கேஷன் வச­திகள் அறிமுகப் ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதனால், 60 கோடிக்கும் அதி­க­மானோர், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு சுல­ப­மாக மாற முடியும். ரொக்­கத்தை விட, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு கூடு­த­லாக செல­வானால், மக்கள், மீண்டும் ரொக்கப் பரி­வர்த்­த­னைக்கே மாறி விடுவர். அதனால், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு அளிக்­கப்­பட்­டுள்ள சேவை வரி விலக்கு, டிச., 31 வரை மட்­டு­மின்றி, 2017 மார்ச் 31க்குப் பின்னும், வருங்­கா­லத்­திலும் நீடிக்க வேண்டும். இத்­த­கைய பரிந்­து­ரை­க­ளுடன் கூடிய கொள்கை திட்ட அறிக்கை, ஒரு வாரத்தில், பிர­தமர் மோடி­யிடம் வழங்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.
முக்­கிய அம்சங்கள்● மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்­கான, சேவை வரி விலக்கு, டிச., 31க்குப் பின்னும் நீட்­டிக்க வேண்டும்● ஸ்மார்ட்போன் பயன்­பாட்டை ஊக்­கு­விக்க சலு­கைகள் ● ஸ்மார்ட்போன் தயா­ரிப்­பிற்கு மானியம் குறித்தும் பரி­சீ­லிக்­கலாம்● மின்­னணு பணப் பரி­வர்த்­தனை குறித்த சந்­தே­கங்­க­ளுக்கு, 1444 என்ற உதவி மைய எண் விரைவில் அறி­முகம்● வணி­கர்கள் பயன்­ப­டுத்த, 10 லட்சம், ‘பாய்ன்ட் ஆப் சேல்’ சாத­னங்கள் இறக்­கு­மதி செய்­யப்­படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)