பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரும் பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறு­வனம்பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரும் பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறு­வனம் ... புதிய பாராக்­ஸைலின் ஆலை; ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் துவக்­கி­யது புதிய பாராக்­ஸைலின் ஆலை; ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் துவக்­கி­யது ...
குறுந்­தொ­ழில்­க­ளுக்கு கூடுதல் கடன்: ரிசர்வ் வங்கி உத்­த­ரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2016
23:27

மும்பை : சிறு, குறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, நடை­முறை மூல­தன தேவை­களை சமா­ளிக்க, கூடு­த­லாக கடன் வழங்­கு­மாறு வங்­கி­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்டு உள்­ளது.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், நாட்டில் பணப் புழக்கம் குறைந்­துள்­ளது. இதனால், குறு, சிறு மற்றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்கள், அவற்றின் அன்­றாட தேவை­க­ளுக்கு கூட பண­மின்றி திணறி வரு­கின்­றன. ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு தினக்­கூலி கொடுக்க முடி­யாமல், பணி­களை நிறுத்த வேண்­டிய சூழ­லுக்கு ஆளா­கி­யுள்­ளன. இப்­பி­ரச்­னை­களை கருத்தில் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட வரம்பை விட கூடு­த­லாக, நடை­முறை மூல­தன கடன் வழங்­கு­மாறு வங்­கி­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்டு உள்­ளது.
அதன் விபரம்: வங்­கிகள், சிறு, குறு மற்றும் நடுத்­தர நிறு­வன வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட வரம்பை விட கூடு­த­லாக, நடை­முறை மூல­தனக் கடன் வழங்­கலாம். எனினும், எந்த அள­விற்கு கூடு­த­லாக நடை­முறை மூல­தனக் கடன் வழங்­கலாம் என்­பது வங்­கி­களின் இயக்­குனர் குழு எடுக்கும் முடிவை பொறுத்­துள்­ளது. இந்த கூடுதல் கடன், அடுத்த ஆண்டு மார்ச் வரை­யி­லான காலத்­திற்கு, ஒரு­முறை மட்­டுமே வழங்க வேண்டும். அதன் பின், வழக்­க­மான நடை­மு­றையை பின்­பற்ற வேண்டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)