புதிய பாராக்­ஸைலின் ஆலை; ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் துவக்­கி­யது புதிய பாராக்­ஸைலின் ஆலை; ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் துவக்­கி­யது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ...
வாராக்­கடன் போன்ற கார­ணங்­களால் புத்­தாண்டில் மந்த நிலை நீடிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2016
23:29

புது­டில்லி : அதி­க­ரித்­துள்ள வாராக்­கடன், குறைந்­துள்ள கடன் வளர்ச்சி போன்­ற­வற்றால், அடுத்த ஆண்டும், வங்கித் துறையில் மந்த நிலை நீடிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
நவ., 8ல், உயர் மதிப்­புள்ள பணம் செல்­லாது என, அறி­விக்­கப்­பட்­டது. அதை தொடர்ந்து, கடந்த இரு மாதங்­க­ளாக, வங்­கிகள், செல்­லாத ரூபாய் நோட்­டு­களை மாற்றித் தரு­வ­தற்கே முக்­கி­யத்­துவம் அளித்து வந்­தன. இதனால், வங்­கி­களின் வழக்­க­மான பணிகள் பாதிக்­கப்­பட்டு உள்­ளன. பணத் தட்­டுப்­பாட்டால், குறு, சிறு, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்கள், வங்­கி­க­ளுக்கு கடனை திரும்பச் செலுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, கடனை திரும்பச் செலுத்த, ரிசர்வ் வங்கி, 90 நாட்கள் அவ­காசம் அளித்­துள்­ளது. எனினும், தொழில் துறையின் மந்த நிலையால், வங்­கி­க­ளிடம், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் கடன் பெறு­வது குறைந்­துள்­ளது. இதனால், வங்­கி­களின் கடன் வளர்ச்­சியும் சரி­வ­டைந்து உள்­ளது. இது போன்ற கார­ணங்­களால், நடப்பு நிதி­யாண்டில், வங்­கி­களின் இழப்பு அதி­க­ரிக்கும்.
கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, 27 வங்­கி­களில், 14 வங்­கிகள், 34,142 கோடி ரூபாய் இழப்பை சந்­தித்­துள்­ளன. நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், ஏப்., – செப்., வரை­யி­லான முதல் காலாண்டு வரை, இதில் எந்த முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. இதே காலத்தில், வங்­கி­களின் மொத்த வாராக்­கடன், 80 ஆயிரம் கோடி ரூபாய் அதி­க­ரித்து, 6,30,323 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், வங்­கி­களின் வாராக்­கடன், நடப்பு மூன்­றா­வது காலாண்டில் மட்­டு­மின்றி, நான்­கா­வது காலாண்­டிலும் அதி­க­ரிக்கும் என, தெரி­கி­றது.
வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்­தாதோர் பிரி­விலும், வங்­கி­களின் கடன் சுமை அதி­க­ரித்து வரு­கி­றது. இப்­பி­ரிவின் கடன், கடந்த நிதி­யாண்டில், 28.5 சத­வீதம் அதி­க­ரித்து, 76,685 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, நடப்பு நிதி­யாண்டில் மேலும் அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், செல்­லாத ரூபாய் நோட்­டு­களை வங்­கி­களில், ‘டிபாசிட்’ செய்­வது, நேற்­றுடன் முடி­வுக்கு வந்­துள்­ளதை அடுத்து, பணம் எடுக்க விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட உள்­ளன. அவ்­வாறு தளர்த்­தப்­பட்டால், மேலும் அதிக நெருக்­க­டியை சந்­திக்க நேரும் என, வங்­கிகள் அஞ்­சு­கின்­றன. ஏற்­க­னவே, ரிசர்வ் வங்கி வழக்­கத்தை விட குறை­வான தொகை வழங்­கு­வதால், நிர்­ண­யிக்­கப்­பட்ட தொகையை கூட, வாடிக்­கை­யா­ள­ருக்கு வழங்க முடி­யாத நிலையில் வங்­கிகள் உள்­ளன. அதனால், கட்­டுப்­பா­டு­களை படிப்­ப­டி­யாக தளர்த்த வேண்டும் என, வங்­கிகள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)