பதிவு செய்த நாள்
02 ஜன2017
17:10
மும்பை : 2017-ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தாண்டின் முதல் வர்த்தகநாளான இன்று(ஜன., 2-ம் தேதி) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி, சரிவுடனேயே முடிந்தன. வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து வருவதால், அதுதொடர்பான பங்குகள் சரிந்து காணப்பட்டதாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.01 புள்ளிகள் சரிந்து 26,595.45-ஆகவும், நிப்டி 6.30 புள்ளிகள் சரிந்து 8,179.50-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக எச்டிஎப்சி., 3.45 சதவீதமும், எஸ்பிஐ., 2.46 சதவீதமும், ஐசிஐசிஐ., 1.37 சதவீதமும், 0.73 சதவீதமும் சரிந்தன. மேலும் இன்போசிஸ், கெயில், சிப்லா, விப்ரோ, என்டிபிசி., டிசிஎஸ்., போன்ற பங்குகளும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|